இருட்டிய பின்பே
மெழுகுவர்த்திகள்
அனைந்து போன
ஓர் இரவில்
சலனமின்றி யாவரும்
தேவதைகள் கனவில்
வரங்கள் யாவும் சாபங்களாய்
ஜீவியத்தில்
கண்ணீரும் தோல்வியும்
சமபட்டுக்கொள்வதில்
நிஜங்களோடு முரண் படுகிறது
வாழ்வு
சரி விகிதமற்ற
பிரபஞ்ச இரகசியம்
வெற்றுப்பொழுதுகளில்
தேடுகிறேன்
இரவுகள் தொலைத்த
தூக்கம்
நம்பிக்கையோடு மடடுமே
நகரும் நாட்கள்
சாளரம் வழியே
கசியும் விடியலை
வரவேற்கப்புறப்படுகிறேன்
மனதில் ஆயிரமாயிரம்
இருள்களோடு
