வெறுமைப் பாடல்

மழை பெருத்த
ஓர் அந்தியின் அகாலத்தில்
பெருந்துயரம் துரத்தும்
பயணத்தின் ஒரு கணத்திலே
அது
நிகழ்ந்தாயிற்று

இத்தனை நாட்களை
தின்ற இந்தக் காலம்
எவ்வளவு குரூரமானது
கனவுகள் நெடுகிலும்
வலி மிகைத்திருந்தது
வெம்மை கசிந்த
துன்பியல் அது

கொடுரம் நிரைந்த
வானாந்தர இருட்டிலும் பார்க்க
பயங்கரம்
நரகம் சபித்த மரணம்
ஜீவியத்தின் உசிதமற்ற
தருனமது

புணர்சிக்குப் பின்
வெறுக்கப்பட்ட பெண்னாய்
அப்போது வானமும்
மழையை வெறுத்துத்தானிருந்தது
பெருந்துயரத்தோடே
பயணம் தொடங்கிற்று
அது
கனவுகளை நொருக்கி
கொடுரமும் வன்மையும்
கலந்த மற்றுமொரு
தோல்வியின் செய்தியை
எங்கிலும் சொல்லியிருந்தது
அது

வெறுமைப் பாடல்

மழை பெருத்த
ஓர் அந்தியின் அகாலத்தில்
பெருந்துயரம் துரத்தும்
பயணத்தின் ஒரு கணத்திலே
அது
நிகழ்ந்தாயிற்று

இத்தனை நாட்களை
தின்ற இந்தக் காலம்
எவ்வளவு குரூரமானது
கனவுகள் நெடுகிலும்
வலி மிகைத்திருந்தது
வெம்மை கசிந்த
துன்பியல் அது

கொடுரம் நிரைந்த
வானாந்தர இருட்டிலும் பார்க்க
பயங்கரம்
நரகம் சபித்த மரணம்
ஜீவியத்தின் உசிதமற்ற
தருனமது

புணர்சிக்குப் பின்
வெறுக்கப்பட்ட பெண்னாய்
அப்போது வானமும்
மழையை வெறுத்துத்தானிருந்தது
பெருந்துயரத்தோடே
பயணம் தொடங்கிற்று
அது
கனவுகளை நொருக்கி
கொடுரமும் வன்மையும்
கலந்த மற்றுமொரு
தோல்வியின் செய்தியை
எங்கிலும் சொல்லியிருந்தது
அது