நீண்டதொரு பயணத்தின்
இடைவெளியில் சுயம் பற்றிய
கனவுகளோடு விழிக்கிறேன்
இருள் சூழ்ந்து மரணத்தின்
காலடிச்சத்தம்இடைவிடாது கேட்கும் பிரம்மைக்குள்
மனது மூழ்கிப்போனது
பத்திரப்படுத்த முடியாத கனவுகளின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது கோரிக்கையும் விண்ணப்பமும்
நீளுகிறது இந்த இரயிலை போல
போகுமிடமோ வந்து விட்டது
கனவுகள் மடடுமே தொடர்கிறது
இந்த உலகமும் ரயில்
பயணமும் ஒன்றுதான்
இறுதியில் பயணச்சீட்டுக்கூட
மிஞ்சுவதில்லை